அஸ்வின் மாதிரி 80ஸ் லயும் ஒரு லெஜண்ட் இருந்தாரா? அவரும் கதை கேட்கும் போதே தூங்குவாராம்!!

0
அஸ்வின் மாதிரி 80ஸ் லயும் ஒரு லெஜண்ட் இருந்தாரா? அவரும் கதை கேட்கும் போதே தூங்குவாராம்!!

குக் வித் கோமாளி மூலம் பிரபலமான அஸ்வின், கதை கேட்கும் போதே தூங்கியதாக தெரிவித்திருந்த நிலையில், அவரைப் போலவே 80ஸ்லையும் ஒரு பிரபலம் இருந்த செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

சுவாரஸ்ய செய்தி :

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம், ரசிகர்கள் மனதில் அழுத்தமான இடத்தை பிடித்தவர் அஸ்வின். இந்த நிகழ்ச்சி இவருக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்ததை தொடர்ந்து, சூப்பர் ஹிட் ஆல்பங்களை கொடுத்து தனது ரசிகர்களை தக்க வைத்துக் கொண்டார். தொடர்ந்து வெள்ளித்திரையில் அறிமுகமான, இவர் என்ன சொல்லப் போகிறாய் என்ற படத்தில் நடித்தார்.

அந்த படத்தின் விழாவில், 40க்கும் மேற்பட்ட இயக்குனர்களிடம் கதை கேட்டு தூங்கி உள்ளேன் என திமிராக பேசி சர்ச்சையில் சிக்கினார். தற்போது அஸ்வின் போலவே, 80ஸ்லையும் ஒரு பிரபலம் இருந்துள்ளார். அவர் வேறு யாருமல்ல நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான். அவரும் கதை கேட்கும்போது தூங்கி விடுவாராம்.

ஆனால், அப்படி அவர் தூங்கினாலும் கதை சொல்லும் இயக்குனர் என்ன சொல்கிறார் என்பதை கேட்டுக் கொண்டுதான் இருப்பாராம். ஆனால், இதுவரை அவர் இதை வெளியில் சொன்னதே கிடையாது. ஆனால் அஸ்வின், இதை வெளிப்படையாக சொல்லி சர்ச்சையில் மாட்டிக் கொண்டார். நடிகர் திலகம் பற்றிய இந்த விஷயம் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here