தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஆஷிஷ் வித்யார்த்தி. மேலும் இவர் பல படங்களில் வில்லனாகவும் , குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து கலக்கியுள்ளார். அதுமட்டுமின்றி 11 மொழிகளில் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
சொல்லப்போனால் இவர் அதிகமாக தமிழ் படங்களிலே நடித்துள்ளார். ஆஷிஷ் வித்யார்த்தி நடிகரும், பாடகருமான ராஜோஷி பருவா என்பவரை முதலாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் பிள்ளை இருக்கிறது. தற்போது இவர் முதல் மனைவி இருக்கும் பொழுதே ரூபாலி பருவ என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
கோல் மழை பொழிந்து அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா…, ஆசிய கோப்பையில் கெத்து காட்டி அசத்தல்!!
இவர்களின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சோஷியல் மீடியாக்களில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் ஆஷி வித்யார்த்தி குறித்து முதல் மனைவி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதாவது, நானும் அவரும் கடந்த 2021ம் ஆண்டு டைவர்ஸ் வாங்கி கொண்டோம். எங்களுக்குள் எந்த பிரச்சனையும் வந்தது இல்லை. அந்த அளவுக்கு ரெண்டு பெரும் ஒருவொருக்கொருவர் புரிந்து வைத்திருந்தோம்.
ஆஷிஷின் எதிர்கால தேவைகளும், என்னுடைய தேவைகளும் வெவ்வேறு என புரிந்தது. இதுதான் எங்களுடைய பிரிவுக்கு காரணமாக இருந்தது. மேலும் எங்களது பிரிவை அழகானதாக மாற்றினார். அவர் இல்லை என்றால் என்னால் இந்த பிரிவை தாங்கிக் கொள்ள முடியாது. மேலும் அவருக்கு துணை தேவை பட்டதால் 2வது திருமணம் செய்து கொண்டார். அவர் ஒன்றும் என்னை ஏமாற்றவில்லை. என்னோட வாழ்க்கையில் நான் தனி பாதையில் செல்கிறேன் என்று கூறியுள்ளார்.