சுந்தர் சியின் இயக்கத்தில் ஆர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள படம், அரண்மனை 3. முதல் இரண்டு பாகங்கள் வெற்றி அடைந்ததால் மூன்றாம் பாகமும் வெற்றி அடையும் என்ற நம்பிக்கையில் ப்ரமோஷன் வேலைகளில் மும்மரமாக படக்குழு இறங்கியுள்ளது.
2014 ஆம் ஆண்டு நடிகை ஹன்சிகாவை வைத்து சுந்தர் சி இயக்கி, நடித்து வெளியான பேய் படம் அரண்மனை 1. இந்த படத்தில் இவர்களோடு ஆண்ட்ரியா, வினய், சந்தானம், பூனம் பஜ்வா போன்ற பிரபலங்கள் நடித்து இருந்தனர். பேய் கான்சப்ட் என்பதால் இப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.
அரண்மனை முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு இரண்டாம் பாகம் திரைக்கு வந்தது. இதில் சுந்தர் சியுடன், திரிஷா, சித்தார்த், சூரி ஆகியோர் நடித்து இருந்தனர். இது முதல் பாகம் அளவுக்கு இல்லை என்றாலும் பிளாப் ஆகாமல் ஓடியது.
தற்போது சுந்தர் சி ஆர்யா, ராசி கண்ணாவை வைத்து மூன்றாம் பாகத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரமோஷன் வேலைகளை தற்போது படக்குழு செய்து வருகிறது. முதல் இரண்டு பாகங்களை நம்பி சுந்தர் சி இயக்கியுள்ள மூன்றாம் பாகம் வெற்றி பெறுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்