ஆசிய கோப்பை பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வீரர் அர்ஷ்தீப் சிங் செய்த தவறுக்கு பல முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்து வந்த நிலையில் அவருக்கு ஆதரவாக முகமது ஷமி தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
இந்திய வீரர் செய்த தவறு!
ஆசிய கோப்பை தொடர் தற்போது விறுவிறுப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு சில ஆட்டங்கள் மட்டுமே மீதம் உள்ள நிலையில் இன்று இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ளனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்திய அணி செய்த ஒரு சில தவறுகளால் கடைசி நேரத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்நிலையில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அர்ஷ்தீப் சிங் தான் காரணம் என அனைவரும் கூறி வந்தனர். ஏனென்றால் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் ஆசிப் அலி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது அவர் அடித்த பந்து அர்ஷ்தீப் சிங் கையில் கேட்ச் ஆக சென்றது. ஆனால் மிகவும் ஈஸியான அந்த கேட்ச் பிடிக்க அர்ஷ்தீப் சிங் தவறிவிட்டார். இதுவே இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் என அனைவரும் விமர்சனம் செய்தனர். இந்த நிலையில் இவருக்கு ஆதரவாக பல இந்திய, பாகிஸ்தான் வீரர்களும் சப்போர்ட்டாக பேசி வந்தனர்.
நேற்று கூட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இவருக்கு ஆதரவாக ஒரு ட்விட் செய்துள்ளார். இந்நிலையில் இன்று இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஆன முகமது சாமியும் அர்ஷ்தீப் சிங்-க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் கவலைப்பட வேண்டாம் நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம், பலரும் கூறும் விமர்சனத்தை தள்ளி வைத்துவிட்டு அடுத்து வரும் போட்டிக்கு தயாராகுங்கள் என முகமது ஷமி பதிவிட்டுள்ளார். இதை பார்த்து அனைவரும் ஒரு அணிக்குள் எவ்வளவு ஒற்றுமை என பாராட்டி வருகின்றனர்.