காலகட்டத்தில் காதல் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றும் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தனது காதலனால் ஏமாற்றப்பட்ட கோவையை சேர்ந்த பெண் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த புகாரில் அப்பெண் கூறியிருப்பதாவது, நான் கல்லூரி படிக்கும் போது நெய்வேலியை சேர்ந்த புவன் கிருஷ்ணன் என்ற இளைஞனுடன் பழக்கம் ஏற்பட்டு, நாங்கள் 5 வருடம் உயிருக்கு உயிராக காதலித்து வந்தோம்.
Enewz Tamil WhatsApp Channel
என்னை கல்யாணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஆனால் தற்போது வரை என்னை கல்யாணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார். இது குறித்து காதலனின் பெற்றோரிடம் நியாயம் கேட்ட போது என்னை தகாத வார்த்தைகள் பேசி வெளியே அனுப்பி விட்டனர் என்று புகார் தெரிவித்தார். இதனை தொடர்ந்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து திருமணம் செய்ய மறுத்த புவன் கிருஷ்ணனை அதிரடியாக கைது செய்தனர்.
தமிழக பள்ளி மாணவர்களே…, 10th, 11th மற்றும் 12th பொது தேர்வுக்கான அட்டவணை வெளியீடு!!