கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாணவர்கள் அரியர் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் டிசம்பர் 10 வரை நீடிக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அரியர் தேர்வுகள்:
முன்னதாக கொரோனா பரவலை அடுத்து தேர்வுக் கட்டணம் செலுத்திய அனைத்து அரியர் மாணவர்களுக்கும், தமிழக அரசு தேர்ச்சி வழங்கியது. இதற்கு, ஏஐசிடிஇ எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அரியர் தேர்வுகளை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் தமிழக அரசிடம் அனுமதி கோரியிருந்தது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அண்ணா பல்கலைக்கழத்தின் இணைப்பில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்கள் அரியர் தேர்வுகளை வருகிற நவம்பர், டிசம்பர் பருவ தேர்வுகளில் எழுத விருப்பப்பட்டால் அதற்க்கு தங்கள் கல்லூரி வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு!!
இதை தொடர்ந்து கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் மாணவர்களின் விவரங்களை டிசம்பர் 10-ம் தேதிக்குள் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இது அவசர அறிவிப்பு என்பதால் காலம் தாழ்த்தாமல் விரைவில் செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.