ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சியில் நேற்று தொகுப்பாளர் ஆக்சன் கிங் அர்ஜுன் தனது வாழ்வில் நடந்த சோக நிகழ்வுகளை சொல்லி நிகழ்ச்சியின் போட்டியாளர்களை ஊக்கப்படுத்தினார்.
ஆக்சன் கிங்குக்கே சோதனை:
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் ஒரு நிலையான இடத்தை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில், 16 போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டு, அவர்களுக்கு பல்வேறு விதமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு இறுதி நிலையில் ஒரு போட்டியாளருக்கு 1 கோடி ரூபாய் பரிசு வழங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியின், தொகுப்பாளராக ஆக்சன் கிங் அர்ஜுன் களமிறங்கியுள்ளார்.
நேற்றைய, எபிசோடில் உடல்நலமின்மை காரணமாக ரவி களத்திற்கு வரவில்லை. இதனை அடுத்து, பேசிய அர்ஜுன் ஆரம்பத்தில் தானும் பல சவால்களை சந்தித்ததாகவும், ஒரு கட்டத்தில் பணம் இல்லாத காரணத்தால் எனது அம்மா எங்களிடம் இருந்த ஒரு வீட்டையும் விற்று எனக்கு பணம் அனுப்பினார். சோதனைகளை கடந்து சாதனை படைப்பது தான் வாழ்க்கை என்று போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்