FIFA உலக கோப்பை: ஒரு கோல் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அர்ஜென்டினா…, சோகத்தில் மெஸ்ஸி ரசிகர்கள்!!

0
FIFA உலக கோப்பை: ஒரு கோல் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அர்ஜென்டினா..., சோகத்தில் மெஸ்ஸி ரசிகர்கள்!!
FIFA உலக கோப்பை: ஒரு கோல் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அர்ஜென்டினா..., சோகத்தில் மெஸ்ஸி ரசிகர்கள்!!

FIFA உலக கோப்பை தொடரில் லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி சவூதி அரேபியாவிடம் ஒரு கோல் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

FIFA உலக கோப்பை:

FIFA உலக கோப்பை தொடரின் 22 வது சீசன் கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், குரூப் C யில், அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள, லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி சவூதி அரேபியாவை எதிர்த்து இன்று போட்டியிட்டது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த போட்டியில், 10 என்ற எண்ணை தனது அடையாளமாக கொண்டுள்ள மெஸ்ஸி 10 வது நிமிடத்தில், கோல் ஒன்றை அடித்து அசத்தினார். இவர் அடித்த கோலை தக்க வைத்துக் கொண்ட அர்ஜென்டினா, ஆட்டத்தின் முதல் பாதியில், 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதையடுத்து தொடங்கப்பட்ட, 2வது பாதியில், எழுச்சி கண்ட சவுதி அரேபியா அணி 48 மற்றும் 53 வது நிமிடத்தில், சலே அல்ஷெரி மற்றும் சேலம் அல்தாவ்சாரி இரு கோல்கள் அடித்தனர்.

ஒரே ஆண்டில் 1500 ரன்கள்…, 2வது இந்தியரானார் சூர்யகுமார்…, அப்போ முதலே இருக்குறது யாரு??

இதன் மூலம், சவுதி அரேபியா அணி 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் அர்ஜென்டினாவை வீழ்த்தி வெற்றியுடன் உலக கோப்பையை துவங்கியது. இந்த போட்டியில் தோல்வி அடைந்ததால், அர்ஜென்டினா ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர். இதற்கு முன், குரூப் Bயில் உள்ள அமெரிக்கா (USA) அணி, வேல்ஸ் அணிக்கு எதிராக மோதியது. இதில், இரு அணிகளும் 1 கோல்களை அடிக்க போட்டியானது டையில் முடிந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here