அரண்மனை கிளி சீரியல் ஏன் நிறுத்துனாங்கன்னு தெரியுமா? …இது தான் காரணமாம்!!!

0

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களை ஒளிபரப்ப தொலைக்காட்சிகள் போராடி வருகின்றனர். பல விதங்களில் சுவாரஸ்யமான, வித்தியாசமான நிகழ்ச்சிகளை வழங்குவதில் முன்னணியில் இருப்பது விஜய் டிவி. விஜய் டிவி.,யில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் பலரிடமும் பிரபலமாக இருந்து வருகிறது.

இது தான் காரணமாம்:

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய சீரியல் அரண்மனைக்கிளி. மனி’ ஆர்காஷ், சூர்யா தர்ஷன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்த இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.  ஹிட் சீரியலாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலுக்கு கொரோனா லாக்டவுன் தடை போட்டது.

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக பல சீரியல்கள் நிறுத்தப்பட்டது. அந்த வகையில் அரண்மைக்கிளி சீரியலும் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து நிறுத்தப்பட்ட சீரியல்கள் மீண்டும் ஒளிபரப்பான போது அரண்மனைக்கிளி சீரியல் மட்டும் ஒளிபரப்பு செய்யவில்லை. இது அந்த சீரியல் ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகவும் இருந்தது.

நன்றாக தானே ஓடியது ஏன் நிறுத்தினார்கள் என்று ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில்,  தற்போது அந்த கேள்விக்கு அரண்மனை கிளி சீரியல் நாயகன் தர்ஷன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதில் அளித்துள்ள தர்ஷன்,  கொரோனா அரண்மனைக்கு வந்து கிளியை தாக்கிவிட்டது, நோய் தொற்று காரணமாக படப்பிடிப்பு நடத்தவில்லை, எனவே சீரியல் நிறுத்தப்பட்டது என்று பதிலளித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here