என்னுடைய பாடல்களை ரீமிக்ஸ் செய்ய சொல்வது தனக்கு எரிச்சலைத் தருவதாக இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் தெரிவித்து உள்ளார்.
இதுவரை ரஹ்மானின் ரீமிக்ஸ்கள்..!
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரஹ்மான் எப்பொழுதும் பாடல்களை ரீமிக்ஸ் செய்வதை விரும்ப மாட்டார். அவர் எப்போதும் புது விதமான இசைகளை தருவதில் தான் ஆர்வமாக இருப்பார். இருப்பினும் சில இயக்குனர்கள் கேட்டுக்கொண்டதால் அவர் பாடல்களை ரீமிக்ஸ் செய்தும் கொடுத்துள்ளார். அந்த வகையில் ஏ.ஆர் ரஹ்மான் முதல் முறையாக ‘தொட்டால் பூ மலரும்’ என்ற எம்.எஸ் விஸ்வநாதன் பாடலை ரீமிக்ஸ் செய்தார்.
வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்
அதன் பிறகு, விஜயின் ‘அழகிய தமிழ் மகன்’ படத்திற்காக ‘பொன்மகள் வந்தாள்’ என்ற பாடலை ரீமிக்ஸ் செய்து கொடுத்தார். இது தான் இவரின் கடைசி தமிழ் ரீமிக்ஸ் பாடலாகும். பிறகு 2017ம் ஆண்டு ‘ஓகே ஜானு’ என்ற ஹிந்தி படத்திற்காக ‘அந்த அரபிக் கடலோரம்’ என்ற பாடலை ரீமிக்ஸ் செய்து கொடுத்தார்.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
ரீமிக்ஸ் ட்ரெண்ட் முடிந்து விட்டது..!
ஸ்ட்ரீட் டான்ஸர் திரைப்படத்திற்காக ஏ.ஆர். ரஹ்மானின் புகழ்பெற்ற பாடல்களில் ஒன்றான ‘முக்காபுலா’ பாடலை ஹிந்தியில் ரீமேக் செய்யும் உரிமையை பிரபுதேவாவுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் வழங்கியது குறித்து தெரிவித்த ரஹ்மான் என்னுடைய பாடலை நானே ரீமிக்ஸ் செய்வது எரிச்சலைத் தருகிறது. மேலும் ரீமிக்ஸ் ட்ரெண்ட் இப்பொது முடிந்து விட்டது என தெரிவித்தார்.
தமிழில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘அயலான்’ படத்திற்கு தற்போது ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |