
அண்மையில் ஏ.ஆர்.ரகுமான் நடத்திய மறக்குமா நெஞ்சம் இசை கச்சேரியில் ஏற்பட்ட குளறுபடிகளால் பெரும் சர்ச்சையே கிளம்பியது. இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமானுக்கு சப்போர்ட்டாக அவருடைய மகள் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவிலிருந்து சோசியல் மீடியாவில் ஏ.ஆர்.ரஹ்மானை மோசடி செய்தவர் என்று கூறி வருகின்றனர். இசை நிகழ்ச்சியில் நடந்ததற்கும் என்னுடைய அப்பாவுக்கு எந்த சம்மந்தமும் இல்லை.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
சொல்ல போனால் ஏற்பாட்டாளர்கள் மீதே 100 சதவீதம் தவறு இருக்கிறது. ஆனால் அதற்கான பொறுப்பை என் தந்தை ஏற்றுக் கொண்டார். இப்படி இருக்கையில் என் தந்தை மோசடி செய்தார் என்று கூறுவது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. என் தந்தை இசை நிகழ்ச்சி நடத்தி, அந்த நிதியை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினார். அவரை பற்றி தவறாக பேசும் முன் இதையெல்லாம் கொஞ்சம் நினைத்து பாருங்கள்” என கோபமாக பதில் கொடுத்துள்ளார்.