கொரோனா பரவலை கட்டுப்படுத்த கோவேக்சின் பயன்படுத்தப்பட்டுவந்த நிலையில் முதல் இரண்டு கட்டங்களை வெற்றிகரமாக கடந்து மூன்றாவது கட்டமாக 2-18 வயதினருக்கு செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மூன்றாம் கட்ட பரிசோதனை:
கொரோனா பரவலை தடுப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின் தற்போது பயன்பாட்டில் உள்ளது. இந்தியாவில் கோவாக்சின் கொரோனா தொற்று பரவலை தடுப்பதில் பெரும்பங்காற்றி வருகிறது. ஏற்கனவே முதற்கட்டமாக 45வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டும் தடுப்பூசியை வழங்கியது. அதன்பின் இரண்டாம் கட்டமாக 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கோவேக்சின் வழங்கப்பட்டது.
தற்போது முன்றாம் கட்ட பரிசோதனைக்காக 2 முதல் 18 வயதினருக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்த பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. அதை மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு (சி.டி.எஸ்.சி.ஓ.,) விரிவாக பரிசீலித்து அந்த நிறுவனத்துக்கு அனுமதி அளித்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு அனுமதியளித்த சி.டி.எஸ்.சி.ஓ மூன்றாம் கட்ட பரிசோதனையை தொடங்குவதற்கு முன், இரண்டாம் கட்ட பரிசோதனை குறித்த இடைக்கால தரவுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த நிறுவனத்துக்கு சி.டி.எஸ்.சி.ஓ., நிபந்தனை விதித்துள்ளது.