தமிழகத்தில் அரசு பணிகளில் கருணை அடிப்படையிலான நியமனம்? உயர்நீதிமன்றம் விளக்கம்!

0
தமிழகத்தில் அரசு பணிகளில் கருணை அடிப்படையிலான நியமனம்? உயர்நீதிமன்றம் விளக்கம்!
தமிழகத்தில் அரசு பணிகளில் கருணை அடிப்படையிலான நியமனம்? உயர்நீதிமன்றம் விளக்கம்!
தமிழகத்தில் அரசு பணிகளில் கருணை அடிப்படையிலான நியமனம்? உயர்நீதிமன்றம் விளக்கம்!

தமிழகத்தில் அரசு ஊழியராக இருந்த ஒருவர் இறந்துவிட்டால் அந்த குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாக உதவ வேண்டும் என்பதற்காக கருணை அடிப்படையிலான பணி வழங்கப்படுகிறது. இந்நிலையில், கருணை அடிப்படையிலான பணி வழங்கப்படுவது தொடர்பாக உயர்நீதிமன்றம் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கருணை அடிப்படையில் பணி:

தமிழகத்தில் அரசு உத்தியோகத்தில் உள்ள ஒருவர் இறக்க நேரிட்டால் அவரின் குடும்ப வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்டு வருகிறது. அதிலும், சிலர் கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட வேலையில் சேராமல் கல்வி தகுதிக்கு ஏற்ற வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், கருணை அடிப்படையிலான பணி நியமனம் தொடர்பாக பெண் மனுதாரர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அதாவது, அரசு ஊழியராக இருந்த அவரது தந்தை இறந்த போது பெண் மனுதாரருக்கு அரசு வேலை பெறுவதற்கான வயது இல்லை.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இதனால், அரசு வேலைக்கான வயது பூர்த்தியானதும் மூன்று ஆண்டுகள் கழித்து கருணை அடிப்படையிலான பணி நியமனம் கேட்டுள்ளார். ஆனால், அரசு ஊழியர் இறந்து மூன்று ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கூறி இவரின் கோரிக்கையை நிராகரித்துள்ளனர். இதனால், கருணை அடிப்படையிலான பணி நியமனம் வழங்க வேண்டும் என அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை கருணை அடிப்படையில் வழங்கப்படும் பணியை தகுதியின் அடிப்படையில் வழங்கும்படி கோரிக்கை வைக்க முடியாது எனவும், அது அந்த திட்டத்திற்கு எதிரானது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கருணை அடிப்படையிலான பணி வழங்கப்படுவதே அந்த குடும்பத்திற்கு வழங்கப்படும் பொருளாதார தீர்வு தான். இதனால், வெகு நாட்கள் கழித்தும் கூட பணி நியமனம் வழங்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கருணை அடிப்படையிலான பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அரசு ஊழியர் இறந்து மூன்று ஆண்டுகளுக்குள் கண்டிப்பாக விண்ணப்பித்திருக்க வேண்டும் எனவும், வயது வரம்பு பூர்த்தியான மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பணி நியமனம் வழங்க முடியாது எனவும் கூறி நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here