தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களின் பணியிட மாறுதல், பதவி உயர்வு போன்றவைக்கான கலந்தாய்வு கூட்டம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டில் மே 8 முதல் 31ம் தேதி வரை பொது மாறுதல் கலந்தாய்வு கூட்டத்தை பள்ளிக்கல்வித்துறை நடத்தியது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதன் மூலம் நடுநிலை பள்ளிகளில் 424 தலைமை ஆசிரியர்கள், தொடக்கப்பள்ளிகளில் 1,111 தலைமை ஆசிரியர்கள் மற்றும் 1,777 இடைநிலை ஆசிரியர்கள் என 3,312 பேர் பணியிட மாறுதல் பெற்றுள்ளதாக அட்டவணையை கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இது போக எஞ்சியுள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை தொகுப்பூதியத்தில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்ப உத்தரவிட்டு உள்ளனர்.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு முக்கிய கண்டிஷன்.., இல்லனா அபராதம் கன்பார்ம்!! அரசு உத்தரவு!!!
வருகிற ஜூன் 7ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்க உள்ளதால் தற்காலிக ஆசிரியர்களுக்கான பணி நியமனம் விரைந்து மேற்கொள்ள, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.