நாடு முழுவதும் அரசுத்துறையில் பணிபுரிபவர்களின் ஓய்வு கால நலன் கருதி பல்வேறு சலுகைகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் 2014 செப்டம்பர் 1ம் தேதிக்கு முன்னதாக பணிபுரிந்தவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அதன் படி உயர் ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களின் பங்களிப்புக்கு நிகராக நிறுவனமும் முதலீடு செய்ய வேண்டும். எனவே இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட ஊழியர்கள் தங்களது நிறுவன முதலீட்டாளர்கள் உடன் இணைந்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என EPFO நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கான கால அவகாசம் மே 3ம் தேதி என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ஜூன் 26ஆம் தேதி வரை காலக்கெடுவை நீட்டித்துள்ளனர்.
அதே போல் உயர் ஓய்வூதிய திட்டத்திற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 20 நாட்களுக்குள் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என EPFO நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. விண்ணப்பங்கள் கால தாமதம் இல்லாமல் திருத்தப்பட இருப்பதால் ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.