விரைவில் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்சின் 7-வது வெர்ஷன் – தூக்கத்தில் சுவாசம் தடைபட்டால் அலாரம் அடிக்குமாம்!!

0

ஆப்பிள் நிறுவனத்தின்  ஸ்மார்ட் வாட்சின் 7-வது  வெர்ஷன் பல்வேறு புதிய அம்சங்களுடன் விரைவில் வெளி வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அம்சங்கள்:

ஸ்மார்ட் வாட்ச் சந்தையில், கணக்கில்லாத பல வகையான ஸ்மார்ட் வாட்ச்களை முன்னணி நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றனர்.  இருந்தாலும், இருக்கும் ஸ்மார்ட் வாட்ச்களில் மிகவும் சிறப்பான ஸ்மார்ட் வாட்ச் என்று ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச் தான் கூறப்படுகிறது.  இந்த முன்னணிக்கு காரணம், ஆப்பிள் வாட்சில் பல உயிர் காக்கும் சிறப்பம்சங்கள் இடம் பெற்றிருப்பதே ஆகும்.

அதாவது, இதயம் சார்ந்த செயல்களை கண்காணிக்கும் எலக்ட்ரோ கார்டியோகிராம் எனப்படும் இசிஜி வசதியை வாட்ச்சுடன் ஆப்பிள் நிறுவனம் இணைத்துள்ளது. இந்த நிலையில், தற்போது இதன் கூடுதல் சிறப்பம்சங்கள் பொருத்திய ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்சின் 7-வது  வெர்சன் விரைவில் அந்த நிறுவனத்தால் வெளியிடப்படவுள்ளது. இதில் இதுவரை இடம்பெற்ற சிறப்புகளோடு இன்னும் பல கூடுதல் சிறப்புகள் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவை அனைத்தும் மருத்துவம் சார்ந்ததாகவும், அன்றாட வாழ்க்கையில் மனிதர்களுக்கு பயன் தரக்கூடியதாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்சில் ரத்த அழுத்தத்தை துல்லியமாக கண்டறிவது, தூக்க குறைபாடுகளை கண்காணித்து களைதல் போன்ற முக்கிய சிறப்பம்சங்கள் இடம் பெறலாம் என்று நம்பப்படுகிறது.

இதோடு சேர்த்து முக்கிய அம்சமாக, உறக்கத்தின் போது சுவாசம் இடை நின்றால் இது அலாரம் கொடுத்து எச்சரிக்கை செய்யும் புதிய அப்டேட்டும் இடம்பெற உள்ளதாக தெரிவித்துள்ளது.  இவை அனைத்தும், அனைத்து ஸ்மார்ட் வாட்சுகளில் இருந்தாலும், ஆப்பிளின் 7 வெர்சனில் இது துல்லியமாக இருக்கும் என்று அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here