ஒடிசா மாநிலத்தில் ஹவுரா ரயில் இரு தினங்களுக்கு முன் தடம் புரண்டதால், அவ்வழியே வந்த கோரமண்டல் மற்றும் சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. 900 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தும், 290 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் இதுவரை 88 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் மீண்டும் ரயில் தடம்புரண்டதாக வெளிவந்த தகவல் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. அதாவது ஒடிசா பார்கர் பகுதியில் சுண்ணாம்பு கற்களை ஏற்றி வந்த சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டது. வழித்தடத்தில் இருந்து 5 பெட்டிகள் கவிழ்ந்ததால, உடனடியாக அவ்வழியே வரவிருக்கும் ரயில்கள் நிறுத்தப்படுவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன் காரணமாக இதுவரை எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. தடம் புரண்ட ரயிலை மீட்கும் பணிகளும் நடைபெற்று வருவதாகவும் ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். ரயில் தடம் புரண்டதிற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.