40 சிஆர்பிஎப் வீரர்களை பலி கொண்ட புல்வாமா தாக்குதலைப் போன்று நடைபெற இருந்த மற்றொரு கொடூர தாக்குதலை இந்திய வீரர்கள் முறியடித்து உள்ளனர். காஷ்மீரில் பயங்கர வெடிகுண்டுகள் நிறைந்த காரை வீரர்கள் கண்டறிந்து உள்ளனர்.
புல்வாமா தாக்குதல்:
2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் இந்திய சிஆர்பிஎப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். 40 வீரர்கள் வீரமரணம் அடைந்த அந்த சம்பவத்திற்கு இந்தியா பதிலடியாக பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் முகாம்கள் மீது விமான படைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. நாட்டையே உலுக்கிய இந்த புல்வாமா தாக்குதலைப் போன்று நடைபெற இருந்த மற்றொரு தாக்குதல் இன்று முறியடிக்கப்பட்டு உள்ளது.
தெற்கு காஷ்மீரின் ராஜ்போரா நகரில் சான்டிரோ கார் ஒன்று நின்றிருந்தது. இது குறித்த தகவல் ராஷ்டீரிய ரைபிள் படை, சி.ஆர்.பி.எப். மற்றும் புல்வாமா போலீசார் என 44 வீரர்கள் கொண்ட குழு அப்பகுதிக்கு விரைந்தது. இந்திய வீரர்களைக் கண்டதும் காரில் இருந்த பயங்கரவாதி தப்பி ஓடி விட்டான். காரை சோதனையிட்ட போது அதில் 350 கிலோவுக்கும் அதிகமான சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 4 நாட்களுக்கு முன் கிடைத்த உளவுத்துறை தகவலின் பேரில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |