கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 25ஆம் தேதியன்று நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. ஆகையால் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டன. இதனால் தமிழக அரசு அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்யக்கூறி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. ஆனால் அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்புகளை கருத்தில் கொண்டு இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவித்தது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளை டிசம்பர் மாதம் நடத்தவுள்ளதாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்தது. தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு நடப்பு ஆண்டு தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் டிசம்பர் 14-ம் தேதி தேர்வுகள் நடத்தப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுகள் முடிந்த பின்னர் மீதியுள்ள தேர்வுக்கான அட்டவணை பல்கலைக்கழக இணைய பக்கத்தில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.