தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை தொடர்ந்து தனியார் பள்ளிகளிலும் தமிழ் பாடத்திட்டம் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டகத்தின் கீழ் இயங்கும் 11 உறுப்புக் கல்லூரிகளில் ஒரு சில தமிழ் மற்றும் ஆங்கில வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கம் செய்துள்ளதாக அறிவித்தனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த அறிவிப்பு கல்வியாளர்கள் உள்ளிட்ட பலரின் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரிடம் உயர்கல்வித்துறை அமைச்சர் பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அறிவிப்பை வாபஸ் பெறுவதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
என்னது எனக்கு தலைக்கனமா? அப்ப அவங்களுக்கு எவ்வளவு இருக்கும்.., டென்ஷனான இளையராஜா!!
மேலும் வழக்கம் போல் வருகிற கல்வியாண்டிலும் அண்ணா பல்கலை. உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி உள்ளிட்ட எந்த பாடப்பிரிவுகளும் நீக்கப்படாது எனவும் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.