பொறியியல் செமஸ்டர் தேர்வு நெறிமுறைகளை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்

0
anna university
anna university

கொரோனா அச்சம் காரணமாக, இறுதி ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக, தேர்வு நடந்தது. தற்போது தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம்:

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மக்கள் அவதிப்பட்டு வந்து நிலையில் நோய் தொற்று பரவலை குறைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தது. பலகட்ட முயற்சிகளுக்கு பின்னனர் தமிழக அரசு ஊரடங்கு பிறப்பித்தது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. இருப்பினும் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்த வண்ணம் உள்ளது.

ஆன்லைன் மூலம் வகுப்புகள் மட்டுமல்லாது தேர்வுகளும் நடத்தப்பட்டு வந்தது. பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடந்த ஆன்லைன் தேர்வை தொடர்ந்து தற்போது அண்ணா பல்கலைகழகம் தேர்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. தற்போது மறுத்தேர்வு மற்றும் ஏப்ரல் / மே மாத செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

  • 3 மணி நேரம் ஆஃப்லைன் முறையில், பேனா மற்றும் காகித முறையில் நடைபெறும்
  • முன்னதாக மாணவர்கள் தேர்வுத் தாளைப் பதிவிறக்கம் செய்ய, கணினி / மடிக்கணினி / மொபைல்போன் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை இணைய வசதியுடன் வைத்திருக்க வேண்டும்.
  • தேர்வு தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாகக் கல்லூரி நிர்வாகத்தின் சார்பாக மின்னஞ்சல் / கூகுள் கிளாஸ்ரூம்ஸ் / மைக்ரோசாப்ட் டீம்ஸ் மூலம் வினாத்தாள் அனுப்பப்படும்.
  • காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை தேர்வுகள் இருக்கும்.
  • ஏ4 தாளில் 30 பக்கங்களுக்கு மிகாமல் மாணவர்கள் தேர்வெழுத வேண்டும்.
  • தேர்வு எழுதி முடித்தவுடன் விடைத்தாளை ஸ்கேன் செய்து பிடிஎஃப் வெர்ஷனாக அனுப்பி வைக்க வேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here