இறுதி ஆண்டு மாணவர்கள் தொழிநுட்ப கோளாறால் தேர்வினை முறையாக எழுத முடியவில்லை என்றால் அவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இறுதி ஆண்டு தேர்வு:
கடந்த ஏப்ரல் மாதம் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் இறுதி ஆண்டு தேர்வுகள் நடக்க இருந்தது. ஆனால், கொரோனா நோய் பரவல் அச்சம் காரணமாக பொது முடக்கம் மார்ச் மாத இறுதியில் அறிவிக்கப்பட்டது. இதனால் தேர்வுகள் நடத்த முடியாமல் போனது. தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதால், தேர்வுகள் வைக்கும் வாய்ப்புகளும் குறைந்து கொண்டே வந்தது.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
ஆனால், இறுதி ஆண்டு மாணவர்களுக்கு தேர்வினை கண்டிப்பாக நடத்த வேண்டும் என்பதில் யுஜிசி உறுதியாக இருந்தது. இது குறித்து மாணவர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டு அதில் யுஜிசி அமைப்பிற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில் மாணவர்களுக்கு கண்டிப்பாக தேர்வுகள் செப்டம்பர் மாதத்திற்குள் நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.
இதனால் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் மாணவர்களுக்கு தேர்வினை நடத்த நடவடிக்கைகளை எடுத்து வந்தது. மாணவர்கள் அனைவரும் தற்போது ஆன்லைன் வாயிலாக தேர்வினை எழுதி வருகின்றனர்.
பொறியியல் மாணவர்களுக்கும் தேர்வு:
பொறியியல் மாணவர்களுக்கும் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடத்தபடும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. அதற்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் முன்னோட்டமாக மூன்று மாதிரி தேர்வுகள் செப்டம்பர் 19, 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடந்தது. இந்த தேர்வுகளில் பல மாணவர்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவதிப்பட்டனர்.
‘RIP இப்படி எழுத கஷ்டமாக இருக்கிறது’ – சுசித்ரா ட்விட்டால் ஷாக்கான ரசிகர்கள்!!
10 சதவீத மாணவர்கள் இந்த பிரச்சனையை சந்தித்தனர். மற்ற 90 சதவீத மாணவர்கள் எந்தவித சிக்கலும் இன்றி தேர்வினை எழுதினர். இது குறித்து அண்ணா பல்கலைக்கழக தேர்வு துறை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டதாவது “தொழில்நுட்ப கோளாறு மற்றும் இணைய வசதியில் சிக்கல் ஏற்பட்டால் மாணவர்கள் மீண்டும் தேர்வினை எழுத வாய்ப்புகள் கொடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.