‘மாணவர்களே இனி புத்தகத்தை பார்த்து தேர்வுகளை எழுதுங்க’ – அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி!!

0

தமிழகத்தில் கொரோனா நோய்பரவல் காரணமாக கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாணவர்களை புத்தகத்தை பார்த்து தேர்வுகளை எழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது.

செமஸ்டர் தேர்வுகள்:

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோன நோய் தொற்று மிக கடுமையான அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்களின் நலன் கருதி கடந்த ஆண்டு பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. மேலும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் மற்றும் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா நோய்பரவல் குறைந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதன் காரணமாக இந்த ஆண்டு தொடக்கத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த மாதம் முதல் தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பள்ளி(12ம் வகுப்பு தவிர்த்து) மற்றும் கல்லூரிகளுக்கு மீண்டும் காலவரையற்ற விடுமுறை என்று அறிவித்தது தமிழக அரசு. அவர்களுக்கு ஆன்லைன் மூலம் படங்கள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கல்லூரி மாணவர்கள் இதுவரை மூன்று முறை ஆன்லைன் மூலம் தேர்வுகளை எழுதியுள்ளனர். ஆனால் அதில் 60% அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இதனை மாற்றியமைக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவெடுத்தது. அதன் அடிப்படையில் வருகிற மே மாதம் நடைபெறவுள்ள செமஸ்டர் தேர்வுகளை மாணவர்கள் புத்தகத்தை பார்த்து எழுதலாம் என்று தெரிவித்துள்ளது.

 

‘இனி பொது இடங்களில் மாஸ்க் அணிய தேவையில்லை’ – அரசு அதிரடி!!

மேலும் செமஸ்டர் தேர்வில் மாணவர்கள், பாடங்களில் இருந்து நேரடியாக பதிலளிக்கும் வகையிலும், புரிந்து பதிலளிக்கும் வண்ணத்திலும், ஒரு வரி பதிலில் பதிலளிக்காமல் நீண்ட விளக்கத்தை அளிக்கும் வகையில் வினாக்கள் அமைய வேண்டும் என்று அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது. இந்த புதிய முறை தேர்வு இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு பொருந்தாது என்றும் மற்ற அனைத்து ஆண்டு மாணவர்களுக்கு புதிய முறை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here