கொரோனாவால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் திரு ஆனந்தக்கிருஷ்ணன்; கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
Youtube => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!
பத்மஸ்ரீ ஆனந்தக்கிருஷ்ணன் கொரோனாவால் மறைவு:
கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்பு முதல் அலையைவிட 2ஆவது அலையில் மிக அதிகமாக உள்ளது. தமிழகத்தில் தினமும் 400க்கும் அதிகமானோர் நோய் தொற்றால் உயிரிழக்கின்றனர். தற்போது அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் அனந்த கிருஷ்ணன் காலமானார்.
93 வயதான அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் அனந்த கிருஷ்ணன்; கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
தற்போது அவரது மறைவிற்கு மு.க.ஸ்டாலின், திமுக மக்களவை எம்.பி. கனிமொழி, பாமக நிறுவனர் ராமதாஸ்; உள்ளிட்ட தலைவர்களும் கல்வியாளர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!