பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் எப்போது துவக்கம்? அண்ணா பல்கலை விளக்கம்!
தமிழகத்தில் பொறியியல் மாணவர்களுக்கான தர வரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் 2ம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவது குறித்த அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
பொறியியல் வகுப்புகள்
தமிழகத்தில் கடந்த 2 வருடங்களுக்கு பிறகு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெற்றது. இதனை தொடர்ந்து பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டு உயர் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டில் பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் 20ம் தேதி முதல் ஜூலை 19ம் தேதி வரை நடைபெற்றது. இதற்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த ஆண்டு கலந்தாய்வில் பங்கேற்க 1.69 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 20ம் தேதி முதல் தொடங்குகிறது. இதனை தொடர்ந்து சிறப்பு பிரிவு இட ஒதுக்கீடு கலந்தாய்வு அதாவது மாற்றுத்திறனாளி, முன்னாள் படைவீரர், விளையாட்டு வீரர், 7.5% அரசுப் பள்ளி ஒதுக்கீடு மாணவர்களுக்கான சிறப்பு கலந்தாய்வு ஆகஸ்ட் 20ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் பொது கலந்தாய்வு ஆகஸ்ட் 25ம் தேதி முதல் அக்டோபர் 21ம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் 2ம் ஆண்டு பொறியியல் மாணவ, மாணவிகளுக்கு நேரடி வகுப்புகள் வருகிற ஆகஸ்ட் 22ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் இவர்களுக்கு செமஸ்டர் தேர்வு டிசம்பர் 21ம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 4வது செமஸ்டர் வகுப்புகள் தேர்வுக்கு பின்பு அடுத்த ஆண்டு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 23ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.