கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் அண்ணா சிலை உள்ள பீடத்தில் மர்ம நபர்கள் காவிக் கொடி கட்டியுள்ளனர்.
அண்ணா சிலையில் ‘காவிக் கொடி’
கன்னியாகுமரி, குழித்துறை சந்திப்பில் உள்ள அறிஞர் அண்ணா சிலை பீடத்தில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் குப்பைகளை கொட்டி, கிஷோர் கே சுவாமி சர்ச்சை!! போலீஸுக்கு வலுக்கும் எதிர்ப்பு!! காவிக் கொடியையும் கட்டியுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தொடரும் சிலை அவமதிப்புகள்
சமீப காலமாக தமிழ்நாட்டில் தந்தை பெரியார், எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு இந்துத்துவ அமைப்புகள் காவி சாயம் பூசுவதும், காவித் துண்டு போர்த்துவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்து அமைப்புகள், கட்சிகள் செய்யும் இந்த செயலுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தந்தை பெரியாரின் கொள்கைகள்
தமிழ்நாட்டில் இந்து அமைப்புகள் வேரூன்ற பெரும் தடையாக இருப்பது தந்தை பெரியாரின் கொள்கைகள்தான் என்ற கருத்து உள்ளது. இதற்காகவே இந்துத்துவ அமைப்புகள் பெரியார் சிலையை சேதப்படுத்தும் பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றன.
சமீபத்தில் கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பின் திராவிட இயக்கத் தலைவர்கள் சிலைகளை அவமதிக்கும் செயலில் இந்து அமைப்புகள் அதிகமாக ஈடுபடத் தொடங்கின.
இந்த சமூக விரோத செயலில் ஈடுபட்ட நபர் அல்லது கும்பல் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.