தமிழகத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் 15ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை ஒட்டி காவல்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாடுடன் பணியாற்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் சார்பாக பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இம்முறை 131 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
அண்ணா பதக்கம்:
முதல்வர் சார்பில் வழங்கப்படும் ‘அண்ணா பதக்கம்’ பெறுபவர்கள் அவரவர் பதவிக்கு ஏற்றவாறு, விதிகளின்படி முழு மானியத்தொகை மற்றும் வெண்கல பதக்கம் அளிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்து உள்ளார். இந்த வருடம் 131 பேருக்கு அண்ணா பதக்கம் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் செப்டம்பர் 15ம் தேதி வழங்கப்பட உள்ளது. ஒரு துறையில் உயிர் அதிகாரி முதல் கீழ்நிலை ஊழியர்கள் வரை அனைவர்க்கும் இப்பதக்கம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழக காவல்துறை – 100 அதிகாரிகள் (கண்காணிப்பாளர் முதல் கான்ஸ்டபிள் வரை)
- தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை – 10 அதிகாரிகள் (துணை இயக்குனர் முதல் தீயணைப்பு வீரர் வரை)
- சிறைத்துறை – 10 அதிகாரிகள் (உதவி சிறை அலுவலர் முதல் சிறைக்காவலர் வரை)
- ஊர்க்காவல் படை – 5 அதிகாரிகள் (மண்டல அதிகாரி முதல் படை வீரர் வரை)
- விரல்ரேகைப் பிரிவு – 2 துணை காவல் கண்காணிப்பாளர்கள்
- தடய அறிவியல் துறை – 4 அதிகாரிகள் (உதவி இயக்குனர் முதல் அலுவலர் வரை)