பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான அனிதா சம்பத் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சியடைய செய்துள்ளார்.
அனிதா சம்பத்
செய்தி வாசிப்பாளராக இருக்கும் அனிதா சம்பத் தொடர்ந்து தனது சமூக கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்து வருபவர். அதனால் தான் அவர் அந்த ஃபீல்டை செலக்ட் செய்ததே. பிக் பாஸ் வீட்டில் அதிகப்படியாக பேசியதற்கு காரணமாகவே வீட்டை விட்டு வெளியேறினார். எதற்கெடுத்தாலும் அழுவது, சத்தம் போடுவது என்று இருந்தார்.
வீட்டை விட்டு வெளியேறிய அவர் கலர்ஸ் தொலைக்காட்சியில் முக்கிய சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார். மேலும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு வருகிறார். மேலும் பல சமூக சேவைகளையும் செய்து வருகிறார். கண் தானம் செய்வது போன்று இவர் வெளியிட்டிருந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி பாராட்டுகளை குவித்தது.
இந்நிலையில் மீண்டும் ஒரு பாராட்டுக்குரிய செயலை செய்துள்ளார். அதாவது இன்ஸ்டாவில் ஒரு இளம் பெண்ணிடம் படவாய்ப்பு அளிப்பதாக சொல்லி தவறாக அழைத்துள்ளார். அந்த பெண் இதனை அனிதா சம்பத்துக்கு அனுப்ப அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இதுபோன்ற எந்த விஷயத்தையும் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்