தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது பல மாடர்ன் மங்கையாக வலம் வரும் அனிகா சுரேந்தர் நீண்ட நாட்களுக்கு பிறகு கடற்கரையில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அனிகா சுரேந்தர்
என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் அனிகா சுரேந்தர். மலையாள நடிகையான இவர் சிறு வயதிலேயே பல பாடங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் நயன்தாராவின் மகளாகவும் நடித்துள்ளார். ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்தின் மகளாக நடித்த இவர் தற்போது வரை அஜித்தின் ரீல் மகள் என்றே புகழப்பட்டு வருகிறார்.
மேலும் மக்கள் மத்தியில் அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. இவர் பார்க்க நயன்தாரா போல உள்ளதால் குட்டி நயன்தாரா எனவும் புகழப்பட்ட வருகிறார்.
விஸ்வாசம் படத்தில் அஜித் தான் அனிகாவை நடிக்க பரிந்துரை செய்தாராம். அந்த அளவிற்கு இருவருக்குள்ளும் ஒற்றுமை இருந்து வருகிறது. இந்த சிறு வயதிலேயே ஒருவருக்கு இந்த அளவிற்கு திறமையா?? என்று வியக்கும் அளவிற்கு நடந்து கொண்டார்.
இந்நிலையில் அவர் போட்டோஷூட்டில் ஆர்வம் காட்டி வந்தார். ஆரம்பத்தில் லைக்ஸ் அள்ளிய அனிகா போட்டோஷூட் நாளடைவில் முகம் சுளிக்கும் படியாக இருந்தது. பலரும் இவர் வயதுக்கு மீறிய செயலை செய்து வருவதாக திட்டி வந்தனர்.
16 வயதான அனிகா தற்போது நாயகியாகவும் உருவெடுத்துள்ளார். விஜய் சேதுபதியுடன் தமிழில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். மேலும் மலையாளத்தில் நாயகியாக களமிறங்கவுள்ளார் அனிகா. இந்நிலையில் அவர் கடற்கரையில் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்