தமிழ் சினிமாவில் ஒரு சிலருக்கு மட்டுமே அறிமுகமான படங்கள் வெற்றிவாகை சூடும். அப்படி தான் நடித்த முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகர் மகேஷ். ஆனால் அடுத்தடுத்த படங்கள் தோல்வியை தழுவிய நிலையில் எப்படியாவது ஜெய்ச்சிட மாட்டோமோ என்று தொடர்ந்து போராடி சினிமாவில் இருந்து காணாமல் போனார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்போது இவர் சினிமாவில் இருக்கிறாரா இல்லையா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தலை காட்டியுள்ளார். அதில் அவர் சினிமாவில் தவறவிட்ட மிகப்பெரிய வெற்றி படங்கள் குறித்து பேசியுள்ளார். அதாவது, பல நல்ல கதைகள் அவரை தேடி வந்ததாம்.
ஆனால் ஏதோ சில சூழ்நிலையால் தவறவிட்டாராம். அது என்னென்ன படங்கள் தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க. அதர்வா நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் படமான ஈட்டி, சசிகுமார் நடித்த சுந்தரபாண்டியன் படத்தில் விஜய் சேதுபதி கதாபத்திரமும் இவர் தான் நடிக்கிறதாக இருந்ததாம். அதுபோக மாயாண்டி குடும்பத்தார் பட வாய்ப்பும் வந்ததாம்.
தமிழக அரசு ஊழியர்களே., மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்??
அதிலும் அவரால் நடிக்க முடியாமல் போனது. இப்படி வெற்றிப்படங்களை தவறவிட்டோமே என்று தற்போது வரை நினைத்து பீல் செய்து வருகிறாராம். மேலும் அவருக்கு சொல்லிக் கொடுக்க யாரும் இல்லாததால் தான், தனது சினிமா கேரியர் மொத்தமாக போனது என்று சொல்லி மகேஷ் கண்கலங்கி பேசியுள்ளார் . தற்போது அவர் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.