வெள்ளை நிற உடையில் விட்டத்தை பார்த்தபடி போஸ் கொடுத்த ஆண்ட்ரியா…!வாயை பிளந்த ரசிகர்கள்!!!

0

சினிமா உலகில் பல பரிமாணங்களை கொண்டு வலம் வரும் நடிகை ஆண்ட்ரியா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அதாவது கடற்கரை அருகே டூ பீஸ் உடையில் வானத்தை பார்த்தபடி உள்ளார்.

திரைப்பட பின்னணி பாடகியாக தன்னுடைய திரை வாழ்க்கையை ஆரம்பித்தவர் ஆண்ட்ரியா. அதன் பின்னர் கண்ட நாள் முதல் என்ற தமிழ் படத்தில் சிறு வேடத்தில் நடித்ததன் மூலம் திரைக்குள் ஒரு நடிகையாக  நுழைந்தார். அதன் பிறகு கெளதம் வாசுதேவ் மேனன் அவர்களின் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் ஒரு கதாநாயகியாக அறிமுகமானார்.

இதனை அடுத்து வரிசையாக தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்க தொடங்கி திரையில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றார். மேலும் இவர் தன்னுடைய நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல் பின்னணி பாடல்கள்  பாடுதல் , நடிகைகளுக்கு பின்னணி குரல் பேசுதல் உள்ளிட்டவைகளையும் செய்து வருகிறார்.

மேலும் அவரின் படங்களில் கவர்ச்சிக்கு எந்தவித குறையும் இருக்காது. அதோடு மட்டுமல்லாமல் திரைத்துறையின் பல முன்னணி பிரபலங்களுடன் கிசுகிசுக்கப்பட்டும் உள்ளார். இந்நிலையில் பல நடிகர் மற்றும் நடிகைகளின் ஓய்வு நேர விருப்ப சுற்றுலா தலமாக இருப்பது மாலத்தீவு.

ஆண்ட்ரியா தற்போது இந்த தீவில் தனது  ஓய்வு பொழுதை கழித்து வருகிறார். மேலும் அங்கு அவர் எடுத்துக்கொள்ளும் போட்டோஷூட் புகைப்படங்களை   இணையத்தில் ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது பீச்சின் அருகில்  அமர்ந்தபடி விட்டத்தை பார்த்தபடி கிளாமர் உடையில் உள்ள புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here