அசத்தலான நடிப்புக்கு சொந்தக்காரரான நடிகை, பாடகி, எழுத்தாளர் என்ற பன்முகத்திறமை கொண்ட ஆண்ட்ரியா காஷ்மீர் பகுதியில் எடுத்துள்ள புகைப்படங்களை இணையத்தில் பதிவிட லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.
நடிகை ஆண்ட்ரியா
கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார் பிரபல நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா. சினிமாவில் இசையமைக்க வேண்டும், பாடகராக வேண்டும் என்ற நோக்கில் சினிமாவுக்குள் நுழைந்தவர் ஆண்ட்ரியா. ஆனால் காலம் தான் இவரை நடிகையாக உயர்த்தியுள்ளது என்று கூற முடியும்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதிகம் அலட்டிக்கொள்ளாத ஆண்ட்ரியாவின் நடிப்பு இவர் நடித்துள்ள திரைப்படங்களில் பார்க்க முடியும். அதே சமயத்தில் நடிகையாக தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் கிடைக்கும் கதாபாத்திரங்களை ஏற்றுக்கொண்டு சிறப்பாக செய்து வருகிறார் ஆண்ட்ரியா.
சீருடையில் இருந்த மாணவிக்கு தாலி கட்டிய இளைஞர் – இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ!!
அடிக்கடி இவரை சுற்றி சில சர்ச்சைகளும், கிசுகிசுக்களும் வலம் வருவதை பார்க்க முடியும். இசையமைப்பாளர் அனிருத் உடனான காதல், நடிகர் சித்தார்த் உடனான நெருக்கமான காதல் காட்சிகள் என அனைத்து வகையிலும் சர்ச்சைக்குள் சிக்கியிருக்கிறார் ஆண்ட்ரியா.
ஆனால் அதே நேரத்தில் விஸ்வரூபம், தரமணி, வட சென்னை ஆகிய திரைப்படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். பாராட்டுகளையும் பெற்றார். தற்போது திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் ஆண்ட்ரியா கைவசம், ‘வட்டம்’, ‘கா’, ‘அரண்மனை 3’, ‘பிசாசு 2’ ஆகிய திரைப்படங்கள் உள்ளன.
இந்நிலையில் விடுமுறை பயணமாக காஷ்மீருக்கு சென்றுள்ள ஆண்ட்ரியா கொட்டும் பனியில் கூலாக நின்று புகைப்படங்களை எடுத்துள்ளார். காஷ்மீர் அழகுடன் கூடுதல் அழகாக தெரியும் ஆண்ட்ரியாவின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.