சமீபகாலமாக தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் உலவ விட்டு இளசுகளின் மனதை திணற வைத்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா. தற்போது இவர் இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை பதிவிட்டு உள்ளார்.
ஆங்கில நாவலின் கதையை கருவாக கொண்டு கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் திரைக்கு கதாநாயாகியாக வந்தவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் தனது வாழ்க்கை பயணத்தை ஒரு பின்னணி பாடகி மற்றும் பின்னணி குரல் கொடுப்பவராகவும் ஆரம்பித்தார். பச்சைக்கிளி முத்துச்சரம் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு 2010 ஆம் ஆண்டு ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்தார்.
அடுத்தடுத்து வரிசையாக படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். எனினும் நடிப்பில் மட்டுமல்லாமல் பின்னணி பாடல் மற்றும் டப்பிங் பேசுவது என தனது பன்முக திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் திரைத்துறையில் கொஞ்ச நாள் தலை காட்டாமல் இருந்த இவர் சமீப காலமாக இன்ஸ்டா போன்ற சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது ஒரு வீடியோவை பதிவிட்டு உள்ளார். அந்த வீடியோவில் மாலத்தீவில் வீட்டின் கதவை திறந்து அப்படியே கடலின் உள்ளே நேராக செல்கிறார். இந்த கூல் வீடியோ ரசிகர்களை சூடேற்றி உள்ளது. மேலும் இந்த வீடியோ 1 மணி நேரத்திற்குள்ளாக எக்கசக்க லைக்ஸ்களை பெற்று உள்ளது.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்