நடிகை, பாடகி என பல்வேறு முகங்களை கொண்டவர் ஆண்ட்ரியா. இவர் சினிமாவில் நுழைந்ததற்கு பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்கலேயே நாம் அதிகம் பாத்திருப்போம். ஆனால் இவரது கல்லூரியில் படிக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழில் அஜித்தின் மங்காத்தா, கமலின் விஸ்வரூபம், சுந்தர் சியின் அரண்மனை, தனுஷின் வடசென்னை, விஜய்யின் மாஸ்டர் என ஏகப்பட்ட முன்னனி ஹீரோக்களின் படங்களில் நடித்து பிஸியாக இருப்பவர் நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா. நடிப்பை தாண்டி இவர் பாடல்களும் நன்றாக பாடுவார் என்பது நம் அனைவர்க்கும் தெரியும். தற்போது ஆண்ட்ரியா மிஷ்கினின் ‘பிசாசு 2’ படத்தில் நடித்து வருகிறார்.
ஆண்ட்ரியா தற்போது இவர் கல்லூரி படிக்கும் நாட்களில் தன் நண்பர்களுடன் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் “நான் ஒரு கல்லூரிப் பெண்ணாக இருந்தபோது, வளர வேண்டும் என்று விரும்பினேன்… இப்போது நான் பெரியவளாக வளர்ந்த பிறகு, மீண்டும் கவலையற்ற கல்லூரிப் பெண்ணாக திரும்பிச் செல்ல விரும்புகிறேன்” என தலைப்பிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்