மாநிலத்தில் ஜனவரி 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு – அரசின் கூடுதல் கட்டுப்பாடுகளால் பீதியில் மக்கள்!!

0

நம் அண்டை மாநிலமான ஆந்திராவில் தற்போது அமலில் உள்ள இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகிற ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு:

ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், கடந்த திங்கள் கிழமை மட்டும்,  30,182 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், விசாகப்பட்டினத்தில் 1,018 பேருக்கும், சித்தூரில் 1,004, மேற்கு கோதாவரியில் 46 மற்றும் கர்னூல் பகுதியில் 85 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், தற்போது அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகிற ஜனவரி 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

அந்த வகையில், இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இந்த இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். இந்த நேரத்தில், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போக, பொது இடங்களில் நடத்தப்படும் கூட்டங்களில் 100 பேருக்கும், திறந்த வெளியில் கூடுவதற்கு 200 பேருக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here