அந்தமானை பீதியில் உறையவைத்த நிலநடுக்கம் –  பொதுமக்கள் அச்சம்!!

0
இந்தியாவில் தொடர்ந்து 10 இடங்களில் நிலநடுக்கம் - உச்சகட்ட பீதியில் மக்கள்!!

அந்தமான்-நிக்கோபார் தீவுகள் பகுதியில் இன்று காலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள போர்ட் ப்ளேயர் என்ற பகுதியில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த லேசான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. அதை தொடர்ந்து காலை 9.15 மணி அளவில் இரண்டாவது நிலநடுக்கம் அந்தமானில் ஏற்பட்டுள்ளது.

முதலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை விட இது சக்தி வாய்ந்ததாக உள்ளது. மேலும் 6.2 என ரிக்டர் அளவுகோளில் பதிவாகியுள்ளது. இந்த 2 நிலநடுக்கங்களாலும் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.இந்த நிலநடுக்கத்தினால் ஒரு சில இடங்களில் கட்டிடங்கள் லேசாக குலுங்கி உள்ளன.

மேலும் அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் இவ்வாறு தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். சில நாட்களுக்கு முன் டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here