நாளை முதல் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு பேட்டி!

0

நாளை (செப்டம்பர் 1,2021) பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தமிழகத்தில் திறக்கப்படும் நிலையில் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

தமிழகத்தில் அதிகரித்த தொற்று நோயால் கடந்த பல மாதங்களாகவே பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால் இரண்டாம் அலையின் தாக்கம் தற்போது வெகுவாக குறைந்துள்ள நிலையில் தமிழக அரசு நாளை முதல் மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க அனுமதித்துள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செய்தியார்ளர்களிடம் பேட்டி அளித்து கீழ்குறிப்பிட்ட தகவல்களை அளித்துள்ளார்.

  • மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் நிச்சயம் மாஸ்க் அணிந்து வரவேண்டும் – ஒவ்வொரு வகுப்பறையிலும் கிருமிநாசினி பாட்டில் வைத்திருக்க வேண்டும்
  • ஒரு நாளில் 5 வகுப்புகள் மட்டும் செயல்படும், விளையாட்டு நேரம் கிடையாது.
  • காலை 9.30 மணிமுதல் மலை 3.30 மணிவரை, வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடைபெறும்
  • தொடக்கம் முதலே பாடம் நடத்தப்படாது, மாணவர்கள் உளவியல் ரீதியாக தயாரான பின்னரே பாடம் நடத்தப்படும்
  • பெற்றோர்கள் மாணவர்கள் குறித்து அச்சப்பட தேவையில்லை, மாணவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here