அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதனால் அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு, கல்வித் தரம் போன்றவைகளை தமிழக பள்ளி கல்வித்துறை மேம்படுத்தி வருகிறது. மேலும் பள்ளி மாணவர்களுக்காக மதிய உணவுத் திட்டத்துடன் காலை உணவுத் திட்டத்தையும் வழங்குகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் முதல் முறையாக பசுமை பள்ளி திட்டம் 500 அரசு பள்ளிகளில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை திருவாரூர் பள்ளியில் தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், “முதற்கட்டமாக தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம் விரைவில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் அமல்படுத்தப்படும்.
தமிழக மக்களே ரெடியா? நாளை (20.01.2023) இந்தந்த பகுதிகளில் பவர் கட்., வெளியான அறிவிப்பு!!
பல்வேறு பிரச்சனைகளால் பள்ளி படிப்பை இடைநிறுத்திய மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கை மேம்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அரசு பள்ளிகளில் உள்ள ஒன்பதாயிரம் ஆசிரியர் காலிப்பணியிடங்களை பெற்றோர் மற்றும் ஆசிரியர் கழகத்தால் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.” என கூறியுள்ளார்.