தமிழர் திருநாளான பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 15 ஆம் தேதியில் இருந்து 17 ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்திருந்த நிலையில் தற்போது முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது இந்த 3 நாட்கள் தொடர் விடுமுறையை தொடர்ந்து 18 ஆம் தேதியும் விடுமுறை இருப்பதாக இணையத்தில் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதாவது வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு செல்பவர்களுக்காக கூடுதல் விடுமுறை அளிக்கும்படியாக கோரிக்கை ஏற்கனவே வைக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தான் இந்த 18 ஆம் தேதி விடுமுறை என செய்திகள் வெளியாகி வருகிறது.
இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இப்பொழுது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார். அதாவது, வழக்கம் போல பள்ளி, கல்லூரிகள் 18 ஆம் தேதியில் இயங்கும் என்றும் விடுமுறை கிடையாது என்றும் கூறியுள்ளார். இதனால் மாணவர்கள் சற்று அப்செட்டாகியுள்ளனர்.