பொங்கலுக்கு ஹிப்ஹாப் தமிழா நடித்த அன்பறிவு திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று முன்தினம் வெளியானது. ட்ரைலரை பார்த்து விட்டு இப்படத்தின் கதை சூர்யாவின் வேல் திரைப்படத்தின் கதை போன்று இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இசையமைப்பாளராக இருந்து தற்போது சினிமாவில் நடிகனாக நடித்து கொண்டிருப்பவர் தான் ஹிப் ஹாப் தமிழா ஆதி. தற்போது இவர் நடித்த, அஸ்வின் ராம் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் ”அன்பறிவு”. இத்திரைப்படம் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது. தியேட்டரில் வெளியிடாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் இந்த திரைப்படத்தை வெளியிட உள்ளனர். இந்த திரைப்படத்தில் ஆதி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் மற்றும் இந்த திரைப்படத்திற்கு இவரே இசைமைத்துள்ளார்.
அன்பறிவு திரைப்படம் பொங்கல் அன்று வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது. இந்நிலையில் அப்படியே இந்த திரைப்படத்தின் கதை சூர்யா நடித்த வேல் திரைப்படம் போலவே உள்ளதாக பேசப்பட்டு வருகிறது. வேல் பட கதை போன்று இல்லாமல் இருந்தால் மட்டுமே இந்த திரைப்படம் வெற்றி பெறும், இல்லையெனில் அதிக அளவு நஷ்டத்தையே ஏற்படுத்தும். அதிக அளவில் இந்த திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்த நிலையில் ட்ரைலர் வெளியான உடனே அப்படியே நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்