உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி.ஆனந்திபன் படேலுக்கு மத்தியப்பிரதேச ஆளுநர் பதவியை கூடுதல் பொறுப்பாக அளித்துள்ளார் குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த்.
மத்தியப்பிரதேச ஆளுநர் மரணம்
மத்தியப்பிரதேச ஆளுநர் பதவியை வகித்தவர் திரு லால் ஜி டண்டன். அவர் சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
கூடுதல் பொறுப்பு
அவர் மறைவையடுத்து குடியரசுத் தலைவர், உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி.ஆனந்திபன் படேலுக்கு மத்தியப்பிரதேச ஆளுநர் பதவியை கூடுதல் பொறுப்பாக அளித்துள்ளார்.
இதையும் படியுங்க ⇒⇒சட்டசபைக் கூட்டத்தொடரில் பங்கேற்ற எம்.எல்.ஏ வுக்கு கொரோனா!!!
அவர் மத்தியப்பிரதேச ஆளுநரின் செயல்பாடுகளை தற்போதைய தனது கடமைகளுடன் சேர்த்து கூடுதலாக கவனிப்பார். மத்தியப்பிரதேச ஆளுநர் அலுவலகத்திற்கு வழக்கமான ஏற்பாடுகள் செய்யப்படும் வரை இந்த ஏற்பாடு தொடரும் என்று குடியரசுத் தலைவர் அலுவலக செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
திருமதி.ஆனந்திபன் படேல்
இவர் முன்னாள் மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் ஆளுநராக பதவியில் இருந்தவர் ஆவார். இவர் குஜராத் மாநில முன்னாள் முதல்வராகவும் பதவி வகித்துள்ளார். இவர் 1987 முதல் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக இருந்து வருகிறார்.