உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் பல வீரர்களை ரோஹித், ராகுல் ட்ராவிட் தேர்வு செய்துள்ளனர். இதனால் இந்த கூட்டணி வெற்றி பெறுமா என ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.
T20 உலக கோப்பை ஒரு பார்வை!!
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் T20 உலக கோப்பையில் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்க உள்ளது. இந்த தொடருக்கான வீரர்களை இந்திய அணியில் தேர்வு செய்வதற்கு பலரும் பல கருத்துக்களை முன் வைத்தனர். ஏனென்றால் கடந்த முறை நடைபெற்ற உலக கோப்பை தொடரில் சில திறமையான வீரர்களை தேர்வு செய்யாததால் இந்திய அணி தோல்வி அடைந்தது என குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதனால் இந்த ஆண்டு உலக கோப்பைக்கு வீரர்களை தேர்வு செய்வதே BCCI க்கு மிகப்பெரிய தலைவலியாக இருந்தது.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
இந்த தலைவலியை போக்கும் படி ரோஹித், ட்ராவிட் இணைத்து பல வீரர்களின் பெயர்களை BCCI க்கு பரிந்துரை செய்தனர். அதன்படி அணியில் அஸ்வின், யுவேந்திர சஹால் இடம் பிடித்தனர். இதில் யுவேந்திர சஹால் திறமையான ஆட்டக்காரராக இருந்தாலும் கடந்த முறை உலக கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெறவில்லை. மேலும் இவர் இல்லாததால் தான் இந்திய அணி தோல்வி அடைந்தது என பலரும் சுட்டிக்காட்டினர். இந்த தவறை நடப்பாண்டு உலக கோப்பையில் இந்திய அணி சரி செய்துள்ளது. ஆனால் முகமது ஷமியை இந்திய அணியில் எடுக்க மறந்து விட்டனர்.
முன்னணி வேகப்பந்து வீச்சாளரான இவர் பல சர்வதேச தொடர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய புள்ளியாக இருந்துள்ளார். ஆனால் இவர் இந்த ஆண்டு உலக கோப்பையில் இடம் பெறாதது ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்களை தேர்வு செய்வதற்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தான் முக்கிய காரணமாக அமைத்துள்ளனர். இதனால் இவர்களின் கூட்டணி உலக கோப்பை தொடரில் வெற்றி பெற்று பட்டத்தை வெல்லுமா என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.
உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூரியகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, அஷ்வின், யுவேந்திர சஹால், அக்சர் படேல், பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்சல் பட்டேல், அர்ஷ்தீப் சிங்.