ஆங்கில நடிகையான எமி ஜாக்சன் தற்போது மீண்டும் தமிழ் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைக்கவுள்ளார். அது பற்றிய தகவலை இந்த பதிவில் காணலாம்.
எமி ஜாக்சன்:
தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் படம் மூலம் என்ட்ரி கொடுத்தவர் நடிகை எமி ஜாக்சன். இவருக்கு இந்த படம் நல்ல ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே இவர் பக்கம் திரும்பி பார்க்கவைத்தது. அதை தொடர்ந்து தாண்டவம், தெறி, 2.0 ஆகிய படங்களில் நடித்து விட்டு பாலிவுட் படங்களில் நடிக்க தொடங்கினார்.
இடையில் திடீர் என கர்ப்பமாக இருப்பதை அறிவித்த எமி பின்னர் ஜனவரி 2019 இல், ஜார்ஜ் பனாயிடோவுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். மேலும் அதே ஆண்டு செப்டம்பரில் இவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் திடிரென்று இவர் தன் காதலரை பிரிவதாக அறிவித்தார். தற்போது மற்றொரு ஹாலிவுட் நடிகரை டேட்டிங் செய்து வருகிறார்.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
இந்நிலையில் மி ஜாக்சன் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க உள்ளார். அதாவது இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடிக்க உள்ள படத்தில் தான் எமி ஜாக்சன் ஹீரோயினாக ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளாராம். இதனால் இவரின் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.