தெலுங்கானா எம்.பி சவாலை நிறைவேற்றிய அமிதாப் பச்சன்… என்ன பன்னிருக்காருனு பாருங்க!!!

0

ஹிந்தி திரையில் தன் நிகர் இல்லாத நடிகராக வலம் வருபவர் நடிகர் அமிதாப் பச்சன். இவர் தெலுங்கானா மாநில எம்.பி சந்தோஷ் குமார் விடுத்த கிரீன் இந்தியா சவாலை ஏற்று பிலிம் சிட்டியில் ஒரு மரக்கன்றை நடவு செய்துள்ளார்.

கிரீன் இந்தியா சவால் சமீபத்தில் தென்னிந்தியாவில் பரவ தொடங்கியது. அதாவது ஒருவர் ஒரு மரக்கன்றை  நட்டு மற்றொருவரின் பெயரை கூறி மரக்கன்றை நட கேட்டு கொள்ள வேண்டும். அந்த பெயர் குறிப்பிட்ட நபர்  மரக்கன்று ஒன்றை  நடவு செய்து அடுத்த நபரின் பெயரை தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு ஒரு சங்கிலி தொடராக இந்த கிரீன் இந்தியா சவால் அமையும். இந்நிலையில் இது போன்ற சவாலை ஏற்கனவே நடிகர் மகேஷ் பாபு நடிகர் விஜய் மீது விடுத்தார். விஜய் அவர்களும் இந்த சவாலை ஏற்றுக்கொண்டு மரக்கன்றை நட்டார்.

தற்போது இந்த கிரீன் இந்தியா சவாலை தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த எம்.பி சந்தோஷ் குமார், நடிகர் அமிதாப் பச்சன் மீது விடுத்து உள்ளார். இந்த சவாலை ஏற்றுக் கொண்டார் அமிதாப். இந்நிலையில் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் இருக்கும் இவர், ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ஒரு மரக்கன்றை நட்டு உள்ளார். இந்த சம்பவத்தின் போது இவருடன் நடிகர் நாகார்ஜுனா உடன் இருந்து உள்ளார். இந்த நிகழ்வின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here