மனைவியை விட்டு பிரிந்த பிரபல நடிகர்.. அமீர்கான் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி!!!

0

ஹிந்தி திரை உலகத்தில் முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் அமீர்கான். இவர் தன்னுடைய இரண்டாவது மனைவி கிரண் அவர்களை விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்து உள்ளார். இந்த அறிவிப்பு அவரின் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் அமீர்கான் அவர்கள் 1986 ஆம் ஆண்டு ரீனா தத்தா என்பவரை திருமணம் செய்து இவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 16 ஆண்டுகளுக்கு பிறகு 2002 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதையடுத்து லகான் என்ற ஹிந்தி படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்து கிரண் ராவ் சந்தித்து காதல் வயப்பட்டு காதல் 2005ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆசாத் ராவ் கான் என்று ஒரு மகனும் உள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிய போவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதாவது அந்த அறிக்கையில் , “இந்த 15 அழகான ஆண்டுகளில் நாங்கள் வாழ்நாள் அனுபவங்கள், மகிழ்ச்சி மற்றும் சிரிப்பு ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டுள்ளோம். எங்கள் உறவு நம்பிக்கை, மரியாதை மற்றும் அன்பில் மட்டுமே வளர்ந்துள்ளது. இப்போது நாங்கள் எங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்க விரும்புகிறோம். நாங்கள் எங்கள் மகன் ஆசாத்துக்கு அர்ப்பணிப்புள்ள பெற்றோர்களாக இருப்போம்” எனவும் கூறியுள்ளார்.

மேலும் ,தங்களின் நலம் விரும்பிகளை நோக்கி , “உங்கள்  நல்வாழ்த்துக்கள் மற்றும் ஆசீர்வாதங்கள் தொடர்ந்து வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். மேலும், எங்களைப் போலவே இந்த விவகாரத்தை நீங்கள் ஒரு முடிவாக அல்லாமல் ஒரு புதிய பயணத்தின் தொடக்கமாக  பார்ப்பீர்கள் என்று நம்புகிறோம்” என கூறியுள்ளார். மேலும் திரைப்படங்களில் இனி ஒன்றாக பணியாற்ற உள்ளோம் எனவும் தெரிவித்து உள்ளனர். அமீர்கான் மற்றும் கிரண் அவர்களின் இந்த அறிவிப்பு அவரின் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here