இந்தியா – சீனா எல்லைப் பிரச்னை – மத்தியஸ்தம் செய்ய தயார் என டிரம்ப் அறிவிப்பு..!

0

இந்தியா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையே ஏற்பட்டு உள்ள எல்லைப் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்து வைக்க தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

எல்லைப் பிரச்சனை:

சீனா அருணாச்சல பிரதேசத்தை முழுவதுமாக தன் வசத்தில் கொண்டு வர லடாக்கின் சில பகுதிகளை உரிமை கொண்டாடி வருகிறது. இந்த காரணத்தால் லடாக்கை யூனியன் பிரதேசமாக இந்தியா அறிவித்த பொழுது அதற்கு சீனா தனது எதிர்ப்பை தெரிவித்தது. லடாக் எல்லையில் இந்திய – சீன ராணுவ வீரர்கள் இடையே கடந்த 5ம் தேதி கைகலப்பு ஏற்பட்டது. அன்றிலிருந்தே இரு நாடுகளுக்கு இடையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. சீனா லடாக் எல்லையில் கூடாரம் அமைத்து தனது படைகளை குவித்து வருகிறது.

அதற்கு பதிலடி வழங்கும் வகையில் இந்தியாவும் தனது படைகளை அதிகமாக அளவில் குவித்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையில் போர் பதற்றம் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் இரு நாட்டு எல்லைப் பிரச்சனைகளை மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக இரு நாடுகளிடமும் பேசியுள்ளதாக கூறியுள்ளார்.

ஏற்கனவே காஷ்மீர் பிரச்சனையின் பொழுது இந்தியா & பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக டிரம்ப் அறிவித்து இருந்த பொழுது அது நாட்டின் உள்நாட்டு பிரச்சனை என இந்தியா அதற்கு மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here