கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடும் அமெரிக்க மக்களுக்கு இலவச பீர் வழங்கப்படும் என அமெரிக்க நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அமெரிக்க மக்கள் அனைவர்க்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அந்நாட்டு அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. மேலும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள பல்வேறு சலுகைகளை அமெரிக்கா அறிவித்து வருகிறது. இதற்காக அந்தந்த மாகாணங்களும் அமெரிக்க அரசும் பல வகையான கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்து வருகிறார்கள்.
தற்போது தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு பீர் இலவசமாக வழங்கப்படும் என்று மதுபான தயாரிப்பு நிறுவனமான அன்ஹீசர் & புஷ்ச் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் சுதந்திர தினமான ஜூலை 4 -ம் தேதிக்கு முன்னதாக 70% அமெரிக்க மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை செலுத்த அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் இதுவரை 60% மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு கிப்ட் வவுச்சர், விளையாட்டுக்கான அனுமதி டிக்கெட்டுகள் என பல்வேறு அறிவிப்புகளை அமெரிக்க நிறுவனங்கள் அளித்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் மதுபான தயாரிப்பு நிறுவனமான அன்ஹீசர் & புஷ்ச் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால் பீர் இலவசம் என்ற நச் அறிவிப்பை விடுத்துள்ளது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!