இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்றினால் படுக்கை வசதி, ஆக்சிசன் போன்ற மருத்துவ உபகரணங்களுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அமெரிக்க அரசு இந்தியாவிற்கு தக்க உதவிகளை புரிந்து வருகிறது.
கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் பல்வேறு கட்ட கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டும் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தற்போது கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசி, ஆக்சிஜன் மற்றும் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது இதன் காரணமாக 47 நாடுகள் ஆக்சிஜன் செறிவூட்டிகள், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் போன்றவற்றை வழங்கி உதவி புரிந்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்க அரசும் இந்தியாவிற்கு உதவி புரிந்து வருகிறது. தற்போது இதுகுறித்து அமெரிக்க இந்திய கூட்டுறவு கூட்டமைப்பை சேர்ந்த முகேஷ் கூறியதாவது, அமெரிக்க அரசு, மக்கள், நிறுவனங்கள் ஆகியவை இந்தியா மக்களுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கி உதவி புரிந்து வருகின்றனர்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,29,942 பேர் பாதிப்பு !!!
கடந்த ஆண்டு இந்திய அரசு அமெரிக்க மக்களுக்கு கொரோனா காலத்தில் பல்வேறு கட்ட உதவிகளை செய்து வந்தது. அதற்கு நன்றிக்கடனாக இந்தியாவிற்கு அமெரிக்க உதவும் என்று அதிபர் பைடன் தெரிவித்திருந்தார். தற்போது அந்த வகையில் அமெரிக்க மக்கள், நிறுவனங்கள், இந்திய வம்சாவளிகள் தொடர்ந்து உதவி செய்து வருகின்றனர். இதுவரை ரூ.3,750 கோடி மதிப்பிற்கு அமெரிக்க இந்தியாவிற்கு உதவி புரிந்துள்ளது. வரும் நாட்களில் இது ரூ.7000 கோடியாக அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.