ஆப்கானில் இருந்து வெளியேறிய அமெரிக்க படைகள் 6 லட்சம் கோடி மதிப்புள்ள ஆயுதங்களை விட்டுச் சென்றுள்ளதால் உலக நாடுகள் பீதியடைந்துள்ளனர்.
ஆயுதங்கள் விட்டு வைப்பு:
ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் உள்ளிட்ட அனைத்து நகரங்களையும் தாலிபான் தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் ஆகஸ்ட் 15ல் கொண்டு வந்தனர். இதனை அடுத்து, அதன் அதிபராக இருந்த அஷ்ரப் கனி அந்த நாட்டை விட்டு தானாகவே வெளியேறினார். இதனால் உலக நாடுகள் அனைத்தும் தங்கள் தூதரகங்களை ஆப்கானில் இருந்து காலி செய்தனர். மேலும், ஆப்கானில் தாலிபான் தீவிரவாதிகளால் போர் பதற்றம் இருந்து வந்தது குறிப்பிடத் தகுந்தது.
இதையடுத்து, அமெரிக்க ராணுவம் தங்கள் படைகளை முழுமையாக வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்தது. அதில், படைகள் வெளியேற்றம் குறித்து பேச உலக தலைவர்கள் பங்கேற்ற ஜி 7 மாநாட்டில் கலந்து கொண்ட ரஷ்யா மற்றும் பிரான்ஸ் நாட்டு அதிபர்கள், படைகள் வெளியேறும் கால அளவை நீட்டிக்க வேண்டும் என அமெரிக்க அதிபரிடம் கோரிக்கைகளை முன் வைத்தனர். இதை எல்லாம் முற்றிலும் மறுத்த அதிபர் ஜோ பைடன், தங்களின் படைகளை நேற்று முழுமையாக வாபஸ் பெற்றுக் கொண்டார்.
தற்போது, ஆப்கானை விட்டு வெளியேறிய அமெரிக்க படைகள் 6 லட்சம் கோடி மதிப்புள்ள ஆயுதங்களை அங்கேயே விட்டுச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இது அமெரிக்க ராணுவத்தின் அடுத்த பழிவாங்கல் அத்தியாயமாக இருக்கலாம் என்று பேச்சு வலுவாக எழுந்துள்ளது. ஐ எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு 36 மணி நேரத்தில் பதில் தாக்குதல் நடத்தி பழி தீர்த்து கொண்ட அமெரிக்க ராணுவத்தின் செயல்களை அவ்வளவு எளிதில் குறைத்து மதிப்பிட முடியாது என்பதே மறுக்க முடியாத உண்மை.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்