ஆம்பூரில் பொது ஊரடங்கு நேரத்தில் சுற்றித்திரிந்த இளைஞரின் இருசக்கர வாகனத்ததை போலீசார் பறிமுதல் செய்ததால் வாலிபர் தீக்குளித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆம்பூரில் அதிர்ச்சி சம்பவம்..!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த தனியார் தொழிற்சாலை தொழிலாளி முகிலன் வயது 27 இவர் நேற்று வீட்டில் இருந்து ஆம்பூர் பஸ் நிலையம் நோக்கி இருசக்கர வாகனத்தில்சென்றுள்ளார். ஆம்பூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதி அருகே தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் பொதுமுடக்கம் காரணமாக பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
அரசு அலுவலக ஊழியர்களுக்கு வாரத்தில் 6 நாட்கள் வேலை – தமிழக அரசு உத்தரவு..!
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த முகிலனை போலீசார் தடுத்து நிறுத்தி பொது முடக்கத்தின் போது வெளியில் சுற்றித்திரிந்ததை அடுத்து போலீசார்கள் அவரது வாகனத்தை பறிமுதல் செய்தனர்.இதையடுத்து முகிலன் இருசக்கர வாகனத்தை திருப்பித்தருமாறு போலீசாரிடம் கேட்டுள்ளார். ஆனால் போலீசார் வாகனத்தை தர மறுத்ததை அடுத்து முகிலன் அங்கிருந்து சென்றுவிட்டு மீண்டும் சற்று நேரத்தில் போலீசாரிடம் வந்து தன்னுடைய வாகனத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.
இந்நிலையில் வாகனத்தை தரவில்லையெனில் நான் தீக்குளிப்பதாக கூறியுள்ளார். சற்று நேரத்தில் அவர் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு போலீசார் முன்னிலையில் திடீரென தீக்குளித்துள்ளார். மேலும் உடலில் தீப்பிடித்து எரிந்த நிலையில் போலீசாரை நோக்கி ஓடிச் சென்றார். அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி, திருப்பத்தூர் மாவட்ட போலீசார்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.